'உலகிலேயே இந்திய மின் இருசக்கர வாகனங்கள்தான் சிறந்தது' - ஏதர் எனெர்ஜி இணை நிறுவனர்!
இந்திய மின்சார இரு சக்கர வாகனங்கள் உலகில் உள்ள எந்த மின்சார இரு சக்கர வாகனத்தையும் விட சிறந்தவை என்றும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகளை விட இந்தியா முன்னேற முடியும் என்றும் ஏதர் எனர்ஜியின் இணை நிறுவனர் ஸ்வப்னில் ஜெயின் தெரிவித்தார்.
இந்திய மின்சார இரு சக்கர வாகனங்கள் உலகில் உள்ள எந்த மின்சார இரு சக்கர வாகனத்தையும் விட சிறந்தவை என்றும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகளை விட இந்தியா முன்னேற முடியும் என்றும் ஏதர் எனர்ஜியின் இணை நிறுவனர் ஸ்வப்னில் ஜெயின் தெரிவித்தார்.
நாக்பூரில் நடந்த 'மீட் ரிஸ்தா' நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கலந்து கொண்டார். இதில் பேசிய ஸ்வப்னில் ஜெயின், இந்திய உற்பத்தியாளர்களின் முன்னேற்றங்களை எடுத்துரைத்து, தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக இந்தியா மாறுவதற்கான தனித்துவமான வாய்ப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
![Ather](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/ather2-1719297799417.jpg?fm=png&auto=format&w=800)
நிகழ்வின் போது, ஏதர் எனர்ஜி தனது சமீபத்திய குடும்ப ஸ்கூட்டரான 'ரிஸ்தா' மற்றும் புதுமையான ஹாலோ ஹெல்மெட்டை சமூக உறுப்பினர்கள் மற்றும் மின்சார வாகன ஆர்வலர்களுக்கு காட்சிப்படுத்தியது.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெயின், மானியங்கள் குறைக்கப்பட்ட போதிலும், அரசின் ஆதரவை வலியுறுத்தினார்.
"மானியங்கள் குறைக்கப்பட்டாலும், 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' முயற்சியால் நாங்கள் வளர்ந்து வருகிறோம். உலகில் உள்ள எந்த எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை விடவும் இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் சிறந்தது, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் வெளிநாடுகளை விட இந்தியா முன்னேற ஒரு தனித்துவமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது," என்றார்.
உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல, தொழில்நுட்பத்தின் ஏற்றுமதியாளர்களாக மாற எங்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது. மின்சார இரு சக்கர வாகனத் துறையின் வளர்ச்சியானது, செமிகண்டக்டர், மென்பொருள், செல் உற்பத்தி மற்றும் எரிசக்தித் தொழில்கள் போன்ற பிற துறைகளையும் ஊக்குவிக்கும்.
![Ather](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/ather1-1719288481148.jpg?fm=png&auto=format&w=800)
EV தொழிற்துறையை ஒரு ஆட்டோமொபைல் துறையாக மட்டும் பார்க்காமல், இந்தியாவில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்பத்தையும் ஈர்க்கக்கூடிய தொழில்துறையாக பார்க்க வேண்டும், இது பல்வேறு தொழில்களை வளர்க்கும், என்றார்.
கடந்த ஆண்டு மின் வாகன விற்பனை 30% அதிகரித்து, ஏறக்குறைய 1,15,000 யூனிட்களை விற்ற ஏதர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஜெயின் எதிர்கால விற்பனை குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தினார், குறிப்பாக ஏதர் ரிஸ்த்தாவுக்குக் கிடைத்த பாசிட்டிவ் ஆன வரவேற்புடன், நிறுவனத்தின் உற்பத்தி திறன் 4,00,000 யூனிட்கள் என்று குறிப்பிட்டார். விரிவாக்கம் குறித்து, ஜெயின் தெற்காசிய சந்தையில் ஊடுருவுவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தினார், ஏற்கனவே நேபாளத்தில் விற்பனை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.