Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

‘அயோத்தி ராமர் கோயில் ஆண்டுக்கு 50 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்’ - அறிக்கையில் தகவல்

அயோத்தியில் ராமர் கோயிலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு இந்தியாவில் மத தலங்கள் சார்ந்த சுற்றுலா வளர்ச்சிக்கான முன்மாதிரியாக அமையும் என ஜெப்ரீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

‘அயோத்தி ராமர் கோயில் ஆண்டுக்கு 50 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்’ - அறிக்கையில் தகவல்

Wednesday January 24, 2024 , 2 min Read

அயோத்தி ராமர் கோயில் விரைவில் பொதுமக்களுக்கு திறந்து விடப்பட உள்ள நிலையில், இந்த புனி தலம் ஆண்டுக்கு 50 மில்லியனுக்கு மேல் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது என்றும், இதன் விளைவாக பொருளாதார நோக்கில் பலவித பலன்கள் உண்டாகும் என்றும் ஜெப்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ram Mandir

இந்தியா உத்தி: அயோத்தி, - இந்திய சுற்றுலா துறைக்கான வாய்ப்பின் திறவுகோள் எனும் தலைப்பிலான அறிக்கையில், ராமர் கோயில் திறப்பு, சுற்றுலா வளர்ச்சிக்கான சட்டமாக அமைந்து உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் என்றும் ஜெப்ரீஸ் தெரிவித்துள்ளது.

“10 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்கள் (புதிய விமான நிலையம், மேம்படுத்தப்பட்ட ரெயில் நிலையம், மேம்பட்ட சாலை வசதிகள்), புதிய ஓட்டல்கள், இதர பொருளாதார நடவடிக்கைகள் மூலம் பல விதத்தில் பலன் அளிக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஜிடிபிக்கும் சுற்றுலாவுக்குமான வருவாய் விகிதம் 6.8 சதவிதமாக இருப்பதாகவும், 3 – 5 வரை கூடுதல் விகிதம் பெற்றுள்ள வளர்ந்த நாடுகள் அல்லது பெரிய பொருளாதாரங்களை விட இது குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டில் சுற்றுலாத்துறை 194 பில்லியன் டாலர் பங்களிப்பு செலுத்தியது. இது ஆண்டு அடிப்படையில் 8 சதவீத அளவில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2033ல் இது 443 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இன்னமும் மத சுற்றுலா தான் பெரிய அளவில் உள்ளது எனக் குறிப்பிடும் ஜெப்ரீஸ், பல பிரபலமான மத தலங்கள் 10 முதல் 30 மில்லியன் பயணிகளை ஈர்ப்பதாகவும் தெரிவிக்கிறது.

tourism in India
“மேம்பட்ட போக்குவரத்து வசதி, உள்கட்டமைப்புடன் அயோத்திய கோயில் திறக்கப்படுவது பொருளாதாரத்தின் மீது தாக்கம் செலுத்தும்,” என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

அயோத்தி மத சுற்றுலா அதிகரிக்க உள்ள நிலையில், ஓட்டல்கள், விருந்தோம்பல், பயண ஏற்பாடு, சிமெண்ட் என தொடர்புடைய துறைகள் மீதும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி ஏற்கனவே உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான மாதிரி வடிவமாக அமைந்துள்ளது.

இங்கு புதிய விமான நிலையம் ரூ.1450 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான முனையம் 2025ல் திறக்கப்பட உள்ளது, ஆண்டுக்கு 6 மில்லியன் பயணிகள் வந்து போகலாம். அயோத்தி ரயில் நிலைய கொள்ளலவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 1200 சதுரடி குடியிருப்பு பகுதியும் திட்டமிடப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்தும் மேம்படுத்தப்படுகிறது.

தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan