Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லி வாங்க - சென்னை மண்டல பெண் டிரைவருக்கு பிரதமர் அழைப்பு!

சென்னை மண்டலத்தைச் சேர்ந்த பெண் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனை பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லி வாங்க - சென்னை மண்டல பெண் டிரைவருக்கு பிரதமர் அழைப்பு!

Saturday June 08, 2024 , 2 min Read

நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து மூன்றாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். பதவியேற்பு விழா டெல்லியில் ஜுன் 9ம் தேதி நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டுத் தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 9 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலப் பிரிவில் பணியாற்றும் மூத்த ரயில் என்ஜின் இயக்கும் லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனை ஜுன் 9ந்தேதி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை மண்டலத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா மேனன், சிறந்த அனுபவமிக்க ரயில் என்ஜின் இயக்குபவர். வந்தே பாரத், ஜன் சதாப்தி போன்ற ரயில்களை சிறப்பாக இயக்கியவர். அது மட்டுமின்றி 2 லட்சம் மணி நேரங்கள் ரயிலை வெற்றிகரமாக இயக்கியவர் என்கிற சாதனையையும் இவர் அடைந்துள்ளார்.

ishwarya menon

ஐஸ்வர்யா மேனன், லோகோ பைலட்

ரயிலை இயக்கும் போது ஜாக்கிரதையாக இருப்பது, ரயில்வே சிக்னல்களை சரியாக புரிந்து அதற்கேற்ப செயல்படுவது போன்ற தனித்திறன்களுக்காக ஐஸ்வர்யா மூத்த அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெற்றவர். இவர் தற்போது தென்இந்தியாவில் பீரிமியம் ரயில்களான சென்னை – விஜயவாடா மற்றும் சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறார். இந்த ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்தே ஐஸ்வர்யா அவற்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா மேனனைப் போன்றே ஆசியாவின் முதல் பெண் ரயில் என்ஜின் டிரைவரான சுரேகா யாதவிற்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுரேகா வந்தே பாரத் ரயிலை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து சோலாபூர் வரை இயக்குகிறார். ஐஸ்வர்யா மேனன், சுரேகா யாதவ் உள்பட 9 லோகோ பைலட்டுகளுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு மஹாராஷ்டிரம் சதாராவைச் சேர்ந்த சுரேகா, இந்தியாவின் முதல் பெண் ரயில் டிரைவராக 1988ல் பணியில் சேர்ந்தார். தன்னுடைய சாதனைகளுக்காக இவர் பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார். மும்பையில் இயக்கப்படும் மித – வேக ரயிலான வந்தே பாரத் ரயிலின் ஓட்டுநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேகா

சுரேகா யாதவ், முதல் லோகோ பைலட்

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பூடான் பிரதமர் ஷெரிங் டாப்கே, மொரிஷியஸ் மற்றும் நேபாள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுளளது. அண்டை நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையின் உள்ளேயும் வெளியேயும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கும் விடுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தலைவர்கள் தவிர, வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட 50 மதத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கும் பதவியேற்பு விழா அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.